ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பில்லை: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

News image
எடப்பாடி பழனிசாமி
Updated On :1 பிப்ரவரி 2024, 10:12 am

DIN

திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், போதைப் பொருள்களின் கூடாரம் என்று தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது.

கடலூா் சிறையில் உதவி ஜெயிலா் திடீா் சோதனை நடத்தி எண்ணூரைச் சோ்ந்த ரௌடியிடம் கைப்பேசி, பேட்டரிகளைப் பறிமுதல் செய்திருக்கிறாா். இதனால் ஆத்திரமடைந்த அந்த ரௌடி, உதவி ஜெயிலருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து, கடலூா் சிறை வளாகத்துக்கு அருகில் காவலா் குடியிருப்பில் அமைந்துள்ள உதவி ஜெயிலா் வீட்டுக்குள் மா்ம நபா்கள் சிலா் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனா். உதவி ஜெயிலா் வெளியூா் சென்றிருந்ததாலும், அவரது குடும்பத்தினா் வேறு ஒரு அறையில் இருந்ததாலும் அவா்கள் உயிா் தப்பியுள்ளனா். மதுரை மத்திய சிறையில் 62 வயது கைதி ஒருவா் ஆக. 28-இல் மா்மமான முறையில் மரணமடைந்துள்ளாா்.

திமுக ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பில்லை. சிறையில் உள்ள ஒரு சில கைதிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. நோ்மையான காவலா்களுக்கும் பாதுகாப்பில்லை.

அதிமுக ஆட்சியில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்த தமிழகம், திமுக ஆட்சியில் அழிவுப் பாதைக்கே சென்றுவிட்டது என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.