எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அடுத்த 4 நாள்கள் எப்படி இருக்கும்? பனி வந்தா மழை வராது என்ற பேச்சைத் தூக்கிப் போடுங்க

இன்று முதல் அடுத்த நான்கு நாள்களுக்கு கிழக்கிலிருந்து வரும் காற்று, தமிழகத்துக்கு மழையைக் கொண்டு வரும் என்று பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

News image

கோப்புப்படம்

Updated On :1 டிசம்பர் 2022, 6:20 pm IST


சென்னை: இன்று முதல் அடுத்த நான்கு நாள்களுக்கு கிழக்கிலிருந்து வரும் காற்று, தமிழகத்துக்கு மழையைக் கொண்டு வரும் என்று பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

தமிழ்நாடு வெதர்மேன் இன்று பதிவிட்டிருப்பதாவது, கிழக்கிலிருந்து அடிக்கும் காற்று தமிழகத்துக்கு மழையைக் கொடுக்கும். பொதுவாக பிற்பகல் முதல் இரவு வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், இரவு முதல் காலை வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்பாக அமையும்.

தமிழகத்தின் மேற்குப் பகுதிகளான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கும் அடுத்த 3 நாள்களுக்கு மழை உண்டு.

இன்று முதல் நாளை காலை வரை டெல்டா முதல் தூத்துக்குடி வரை மழைக்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது. குறிப்பிட்ட எந்த மாவட்டத்தையும் சொல்ல முடியாமல், பரவலாக மழைக்கான வாய்ப்பு தென்படுகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைப் பொறுத்தவரை அடுத்த 3 அல்லது 4 நாள்களுக்கு, திடீர் திடீரென மழை பெய்யலாம். குறிப்பாக சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை நன்றாகவே இருக்கிறது மழைக்கான வாய்ப்பு. 

பனி வந்துடுச்சி. மழை வராது என்ற பேச்சுக்களை எல்லாம் தூக்கிப் போடுங்க. அடுத்த 3 அல்லது 4 நாள்களுக்கு நல்லா மழை பெய்யும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். பிறகு காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து கவனித்து அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

அடுத்த 4 நாள்களுக்கு கட்டாயம் குடை எடுத்து வாருங்கள். திடிரென மழை பெய்யும் எனவே. குடை கட்டாயம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.