நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆளுநரை குறை சொல்லவில்லை: அமைச்சர் ரகுபதி

ஆளுநரை குறை சொல்லவே இல்லை, தாமதிக்கிறார் என்றே சொல்கிறோம் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :3 டிசம்பர் 2022, 1:33 pm IST

ஆளுநரை குறை சொல்லவே இல்லை, தாமதிக்கிறார் என்றே சொல்கிறோம் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி நடந்த பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

6 வாரங்களில் ஒப்புதல் அளிக்க வேண்டிய சூழ்நிலையில், ஆளுநர் காலம் தாழ்த்தியதால் மசோதா காலாவதியாகிவிட்டது. இது தொடர்பாக அமைச்சர் ரகுபதியும் வியாழக்கிழமை ஆளுநரை சந்தித்து, மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார். 

பின்னர் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் இந்தியாவுக்கே முன்மாதிரியான ஒரு சட்டத்தை இயற்றியுள்ளோம். அவசரச் சட்டம் கொண்டு வந்து உடனடியாக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அவசரச் சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததில் எந்த தவறும் இல்லை. அரசாணை வெளியிடாததற்கான காரணத்தை ஆளுநரிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தினோம். 

ஆளுநரை குறை சொல்லவில்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிக்கிறார் என்றே சொல்கிறோம். ஆளுநர் தரப்பில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக இருக்கிறோம்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.