மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் மகா தீபம்!

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 

News image
Updated On :6 டிசம்பர் 2022, 1:18 pm

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 

தீபத் திருவிழாவையொட்டி செவ்வாய்கிழமை மாலை 5.00 மணியளவில் அருள்மிகு செவ்வந்தி விநாயகர், அருள்மிகு தாயுமானசுவாமி மற்றும் அருள்மிகு மட்டுவார் குழலம்மை உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டன. 

Story image

அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு அருள்மிகு உச்சிபிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 40 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள 5 அடி உயர செப்புக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

Story image

 300-மீட்டர் அளவுள்ள திரியில் இலுப்பை எண்ணை,  நல்லெண்ணை, நெய் பருத்தித் துணிகளைக் கொண்டு செய்யப்பட்ட 700-லிட்டர் திரியைக் கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.

Story image

கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், தக்கார் எஸ். செல்வராஜ், இணை ஆணையர்,  இத்திருக்கோயில் உதவி ஆணையர் / செயல் அலுவலர் இரா. ஹரிஹரசுப்பிரமணியன் ஆகியோர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.