புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மணப்பாறையில் யானை தந்தங்கள் விற்பனை: ஒருவர் கைது!

மணப்பாறையில் யானை தந்தங்கள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை வனச்சரகத்தினர், வன பாதுக்காப்புப் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

News image

மணப்பாறையில் யானை தந்தங்கள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்த வனச்சரகத்தினர், வன பாதுக்காப்புப் படையினர்.

Updated On :7 டிசம்பர் 2022, 9:11 am

DIN


மணப்பாறையில் யானை தந்தங்கள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை வனச்சரகத்தினர், வன பாதுக்காப்புப் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தருமபுரி மாவட்டம் வனச்சரகத்திற்குள் கடந்த 2021 ஆம் ஆண்டில் யானை தந்தங்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர்களை தருமபுரி வனச்சரகத்தினர், வன பாதுக்காப்புப் படையினர் கைது செய்து வரும் நிலையில், தற்போது அந்த வழக்கில் தொடர்புடைய 17 ஆவது குற்றவாளியாக மணப்பாறை அடுத்த சுக்காம்பட்டியை சேர்ந்த வெங்கட் ராமராஜ் மகன் கந்தசாமி(48) என்பவரை திருச்சி வன காவல்நிலைய உதவியுடன் தருமபுரி வனச்சரகத்தினர் மற்றும் வன பாதுக்காப்புப் படையினர் தற்போது கைது செய்துள்ளனர். 

இந்த வழக்கில் கந்தசாமி இடைதரகராக செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேர் தேடப்பட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.