தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

'அன்பின் சாரலில் நனைந்தேன்' - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

தென்காசி மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் - அன்பின் சாரலில் நனைந்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். 

News image
Updated On :8 டிசம்பர் 2022, 11:13 am

DIN

தென்காசி மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் - அன்பின் சாரலில் நனைந்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். 

தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதிகை அதிவிரைவு ரயிலில் நேற்று(புதன்கிழமை) இரவு பயணம் மேற்கொண்டார். இன்று காலை தென்காசி வந்த  அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Story image

தென்காசி ரயில் நிலையத்திலிருந்து விருந்தினர் மாளிகை செல்லும் வழியில் முதல்வர் ஸ்டாலின்,  திரண்டிருந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களது உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார். 

Story image

தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களிடையே உரையாற்றினார். 

Story image

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், 'பொதிகையில் புறப்பட்டு தென்காசி வந்தடைந்து, அம்மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் - அன்பின் சாரலில் நனைந்தேன்.

1,03,508 பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

ஆராதனா போன்ற குழந்தைகளும் நம்பிக்கை வைத்துள்ள அரசு என்ற பெருமையோடு பணியைத் தொடர்கிறேன்' என்று பதிவிட்டு தென்காசி பயணம் குறித்த விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.