தனது பள்ளிக்கு கட்டடம் கோரி கடிதம் எழுதிய கோரிக்கை ஏற்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதிகை ரயில் மூலம் இன்று தென்காசி மாவட்டத்திற்கு சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் மூன்றாம் வகுப்பு மாணவியால் தனக்கு எழுதப்பட்ட கோரிக்கை கடிதம் குறித்து பேசினார்.
அப்போது அவர் தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி வினைதீர்த்த நாடார்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் ஆராதனா எனும் மாணவி கடந்து சில தினங்களுக்கு முன்பாக தனக்கு கோரிக்கை கடிதம் எழுதியிருந்ததை பகிர்ந்து கொண்டார்.
“ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்றும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது இலக்கு. 3ஆம் வகுப்பு படிக்கும் ஆராதனா எனும் குழந்தை தான் படிக்கும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை வேண்டும் என எனக்கு எழுதிய கடிதத்தில் கேட்டிருந்தார். எத்தகைய நம்பிக்கையை அவர் என்மீது வைத்திருந்தால் அவர் இந்த கடிதத்தை எழுதியிருப்பார். குழந்தை ஆராதனாவின் கோரிக்கை ஏற்கப்படுவதாக நான் இன்று அறிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொள்ளாச்சியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

தனிமனித சித்திரவதைகளுக்கு எதிராக இந்தியாவில் தனிச் சட்டம் இல்லை
பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து திருடியவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


