பூம்புகார்: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக பூம்புகார் அருகே உள்ள மடத்துப்குப்பம் கடற்கரையில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றன.
இதையும் படிக்க.. குஜராத்தில் காங்கிரஸ் அடைந்தது தோல்வியே அல்ல! அதற்கும் மேல்
இதனிடையே நேற்று மாலை கடற்கரை மணல் பரப்பையும் தாண்டி கடல் அலைகள் சீற்றத்துடன் ஊருக்குள் புகுந்தன. இதன் காரணமாக கடற்கரையை ஒட்டிய மடத்துக்குப்பத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் சின்ன பெருந்தோட்டம் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் கடல் நீரால் சூழப்பட்டது. விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.