/

வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

மாண்டஸ் புயல் காரணமாக வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய  மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 11:03 am

DIN

மாண்டஸ் புயல் காரணமாக வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய  மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல், வலுவிழந்துள்ள நிலையில், இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை மாமல்லபுரத்தில் கரையைக் கடக்கும்  என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக,  மாணவர்களின் பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 18 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், 

நாளை வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.