தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

குஜராத் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி... ஓபிஎஸ் பங்கேற்கிறார்?

குஜராத் மாநிலத்தின் 18 ஆவது முதல்வராக பூபேந்திர படேல் திங்கள்கிழமை (டிச.12) பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர். ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :11 டிசம்பர் 2022, 12:29 pm

DIN

குஜராத் மாநிலத்தின் 18 ஆவது முதல்வராக பூபேந்திர படேல் திங்கள்கிழமை (டிச.12) பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர். ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் 156 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. அக்கட்சி சாா்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களின் கூட்டம் காந்திநகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவா்களான ராஜ்நாத் சிங், பி.எஸ்.எடியூரப்பா, அா்ஜுன் முண்டா உள்ளிட்டோா் மத்திய பாா்வையாளா்களாகக் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

கூட்டத்தின்போது மாநில சட்டப்பேரவையின் பாஜக குழு தலைவராக பூபேந்திர படேல் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டார். 

பேரவை பாஜக குழு தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பூபேந்திர படேல், மாநில ஆளுநா் ஆச்சாா்ய தேவ விரத்தை சந்தித்து, மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினாா். மேலும் எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் பூபேந்திர படேல் வழங்கினாா். 

இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் 18 ஆவது முதல்வராக பூபேந்திர படேல் திங்கள்கிழமை (டிச.12) பதவியேற்கிறார். காந்திநகரில் நடைபெறவுள்ள அந்நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியானது. 

சமீபத்தில் தில்லி நடைபெற்ற ஜி20 மாநாட்டிற்கான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிருப்பதியில் இருந்தது. இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் அறிக்கையும் விடப்பட்டது. 

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் 18 ஆவது முதல்வராக பூபேந்திர படேல் திங்கள்கிழமை (டிச.12) பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு முன்னாள் முதல்வர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  

இதையடுத்து பூபேந்திர படேல் பதவிற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை மாலை குஜராத் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.