காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி: ஒருவரை தேடும் பணி தீவிரம்!

நீலகிரியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும் மாயமான மற்றொரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி: ஒருவரை தேடும் பணி தீவிரம்!
Published on
Updated on
1 min read

நீலகிரியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும் மாயமான மற்றொரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல  வனப்பகுதியில் அமைந்துள்ள சீகூர் ஆணிக்கால் மாரியம்மன் கோவிலில் பூஜை செய்ய சென்ற 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றனர்.

இந்நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய  200 பேர் மீட்கப்பட்ட நிலையில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பேரை சீகூர் ஆற்றில் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர். 

2 மணி நேர தேடுதல் பணிக்கு பின் மூன்று பேரின் உடல் ஆற்றில் சடலமாக மீட்கபட்டுள்ளது. மேலும்  காட்டாற்று வெள்ளத்தில் மாயமான மற்றொரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com