கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் தமிழக அரசை கண்டித்து, அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் கூடலூரில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பழைய பேருந்து நிலையத் திடலில் நடைபெற்றது. நகர செயலாளர் என்.எஸ்.கே.கே.ஆர்.அருண்குமார் தலைமை தாங்கினார், துணைச்செயலாளர் பாலை.ராஜா, பொருளாளர் வி.லட்சம் முன்னிலை வகித்தனர்.
தமிழக அரசின் மின்சாரம், பால் உள்ளிட்டவைகளின் விலைவாசி உயர்வு, நிர்வாக சீர்கேடு போன்றவற்றை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்பாட்டத்தில் எஸ்.நடராஜன், என்.பெரியராமர், எஸ்.ராஜபாண்டி, மகளிர் அணி லோகநாயகி, கவுன்சிலர்கள் கலாமணி, சாந்தி, தேவதர்ஷினி மற்றும் வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.