நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய பதிவுச்சட்ட காலவரம்பு தடையாக இல்லை என்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்ற சுற்றறிக்கையை அனைத்து சார்-பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்புகளை பதிவு செய்ய மறுக்கும் பதிவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீர்ப்புகளை பதிவு செய்யும்போது வழக்கின் மதிப்பு அடிப்படையில் மட்டுமே பதிவுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து மதிப்பில் பதிவுக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய மறுத்த சார்-பதிவாளர் உத்தரவுக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.