சேலத்தில் இறந்த பெண்ணிற்கு மூன்று நாள்கள் சிகிச்சை: மருத்துவமனை முற்றுகை!

சேலத்தில் இறந்த பெண்ணிற்கு மூன்று நாட்கள் சிகிச்சை அளித்ததாக கூறி, தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் இறந்த பெண்ணிற்கு மூன்று நாள்கள் சிகிச்சை: மருத்துவமனை முற்றுகை!
Published on
Updated on
1 min read

சேலத்தில் இறந்த பெண்ணிற்கு மூன்று நாட்கள் சிகிச்சை அளித்ததாக கூறி, தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள பென்னாகரம் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனிதா. இவர்கள் இருவருக்கும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக வனிதாவை மனநலம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி வனிதாவின் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.

பின்னர் வனிதா தானாக பேசி வருவதால் சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மூளை காய்ச்சல் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியதாக தெரியவருகிறது. இதையடுத்து வனிதாவை அழைத்துக் கொண்டு கணவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். 

பின்னர் வனிதாவின் உறவினர்கள் தகராறு செய்த நிலையில் மீண்டும் அவரது கணவர் சேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்துள்ளார்.

பின்னர் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூன்று நாள்களுக்கு முன்பே வனிதா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உறவினர்களிடம் வனிதா இறந்ததை தெரிவிக்காமல் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் தவணை முறையில் பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்  வனிதா நேற்று மாலை விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கு மேற்பட்ட உறவினர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறந்த நபருக்கு மூன்று நாள்களாக சிகிச்சை அளித்தாக வருவதாக உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வனிதாவின் கணவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உறவினர்கள் முன் வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வனிதாவின் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வனிதாவின் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர் இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com