தஞ்சை பனிப்பொழிவில் மறைந்த பெரிய கோயில்!
தஞ்சாவூர் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்தக் கடுமையான பனிப்பொழிவால் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் முற்றிலும் மறைந்துள்ளது.
தற்போது சபரிமலை சீசன் என்பதால், தஞ்சைக்கு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுற்றுலாவுக்கு வந்த நிலையில், பனி மூட்டத்தால், பெரிய கோயிலின் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.