குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

குடியிருப்புகளுக்கு அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தது!

சென்னை அபிராமபுரத்தில் குடியிருப்புகளுக்கு அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2022, 2:17 pm IST

சென்னை அபிராமபுரத்தில் குடியிருப்புகளுக்கு அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அபிராமபுரம் பீமண்ணா கார்டனில் சுமார் 1000 மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இன்று காலை அந்த பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் ஒன்று திடிரென தீப்பிடித்து புகைவந்துள்ளது. 

சிறிது நேரத்தில் டிரான்பார்மர் முழுவதுமாக தீப்படித்து கொளுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. டிரான்பார்மர் அருகேவே குடியிருப்புகள் இருந்ததால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர்.

இது குறித்து மின்வாரிய அதிககாரிகளுக்கும்,  தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

மின்வாரிய ஊழியர்கள் மின் இனைப்பை துண்டித்ததால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அதனை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மாண்டஸ் புயல் மற்றும் கனமழை பெய்து வரும் நிலையில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தீப்பற்றி இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

காலை நேரத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீவிபத்தால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.