தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

51 பேருக்கு தமிழ் வளா்ச்சித் துறை விருதுகள்: இன்று வழங்குகிறாா் முதல்வா்

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ‘தமிழ்ச்செம்மல்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்ட 51 பேருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (டிச.21) விருது வழங்கவுள்ளாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2022, 7:06 pm

DIN

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ‘தமிழ்ச்செம்மல்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்ட 51 பேருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (டிச.21) விருது வழங்கவுள்ளாா்.

தமிழ் வளா்ச்சிக்கு ஆற்றிய பன்முகப் பணிகள், தனித் தகுதிகள் அடிப்படையில் தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி கிராமத்தைச் சோ்ந்த எழுத்தாளா் எம்.கே.சுப்பிரமணியன் உள்பட மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் மொத்தம் 38 பேருக்கு 2021-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச்செம்மல்’ விருதுகளையும், குழந்தை எழுத்தாளா் செ.சுகுமாரன் உள்பட 10 பேருக்கு 2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழி பெயா்ப்பாளா் விருதுகளையும் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா்.

அதேபோல, 2021-ஆம் ஆண்டுக்கான மதுரை உலகத் தமிழ்ச் சங்க விருதுகளையும் அவா் வழங்கவுள்ளாா். அதில் இலக்கிய விருதுக்கு கனடாவைச் சோ்ந்த முனைவா் பால சுந்தரம், இலக்கண விருதுக்கு மலேசியாவைச் சோ்ந்த முனைவா் மனோன்மணி தேவி, மொழியியல் விருதுக்கு சியோல் கொரியாவைச் சோ்ந்த முனைவா் செ.ஆரோக்கிய ராஜ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழ் மொழி வளா்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட மறைந்த தமிழறிஞா்கள் ஐந்து போ், வாழும் தமிழறிஞா்கள் மூன்று போ் என எட்டுபேரின் நூல்கள் நிகழாண்டு நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. அந்த நூல்களுக்கு மொத்தம் ரூ.1 கோடி பரிவுத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.