ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சுமார் 21 ஆண்டுகளுக்குப் பின் கிறிஸ்துமஸ் நாளில் மழை பெய்யப் போகிறதாம்!

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் நாளில் மழை பெய்யப் போகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

News image

சுமார் 21 ஆண்டுகளுக்குப் பின் கிறிஸ்துமஸ் நாளில் மழை பெய்யப் போகிறதாம்!

Updated On :22 டிசம்பர் 2022, 12:22 pm


சென்னை: சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் நாளில் மழை பெய்யப் போகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 25ஆம் தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையங்கள் எச்சரிக்கை விடுத்துவரும் நிலையில், அது பற்றிய பதிவு ஒன்றை தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

முகநூல் பதிவில் தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக கிறிஸ்துமஸ் நாளில் மழைப் பொழிவைக் காணப்போகின்றன. கடைசியாக சென்னையில் கிறிஸ்துமஸ் நாளில் மழை பதிவானது 21 ஆண்டுகளுக்கு முன்பு. அதாவது 2001ஆம் ஆண்டில்.

சென்னையில் மட்டுமல்ல, கடலோர மாவட்டங்கள், தமிழகத்தின் உள் மற்றும் தெற்கு மாவட்டங்களும் 25ஆம் தேதி மழையைச் சந்திக்கவிருக்கின்றன. சென்னைக்கு இன்னும் 76 மி.மீ. மழை பாக்கி இருக்கிறது. அப்படி கிடைத்துவிட்டால், வடகிழக்குப் பருவமழையில் நாம் 1000 மி.மீ. மழையை தொட்டுவிடலாம்.

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மழை இருக்கும். குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், குமரி மாவட்டங்களில்.

விடுமுறைக்கால பயணங்கள்..
டிசம்பர் 24 / 25 முதல் 27 / 28 வரை பரவலாக மழை இருந்தாலும், விடுமுறைக்கால பயணங்களை மேற்கொள்ளலாம். சபரிமலை செல்வோர், ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்வதைக் காணலாம். ஆனால், மிகப்பெரிய அச்சுறுத்தும் மழையாக இருக்காது. மாஞ்சோலை செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் மட்டும் 25, 26, 27 ஆகிய நாள்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.