பொங்கலுக்கு இலவச அரிசி, கரும்பு வழங்குவது அவமானம்: சீமான்

சென்னை வளசரவாக்கத்தில் கக்கன் உருவப்படத்துக்கு சீமான் மரியாதை செலுத்தினார்.
செய்தியாளர் சந்திப்பில் சீமான்
செய்தியாளர் சந்திப்பில் சீமான்

பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருள்கள் வழங்குவதை தேசிய இன அவமானமாக கருதுகிறேன் என நாம் தமிழர் கட்சின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

சென்னை வளசரவாக்கத்தில் கக்கன் உருவப்படத்துக்கு சீமான் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு என இலவசப் பொருள்கள் வழங்குவதை தேசிய இன அவமானமாக கருதுகிறேன். விவசாயிகள்தான் விளைவிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு முழம் கரும்பு கிடையாது. வாழ்வாதாரத்தை மேம்படுத்தாமல் அரசு விவாசாயிகளின் பாரம்பரிய பண்டிகைக்கு இலவசங்களை வழங்கி வருகிறது.

போருக்குச் செல்வதால் மன்னர் ஆட்சியில் வாரிசு வைத்து அரசியல் செய்கின்றனர். பிரிட்டிஷில் கூட மன்னர் வாரிசுகள் ராணுவத்துக்குக்குச் செல்கின்றனர். ஆனால் அதுபோன்ற முறை இங்கு இல்லை எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com