/

கந்தூரி விழா: ஜன. 3 நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கந்தூரி விழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு வருகிற ஜனவரி 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:11 am

DIN

கந்தூரி விழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு வருகிற ஜனவரி 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாகூா் ஆண்டவா் 466-ஆவது ஆண்டு கந்தூரி விழா இன்று (டிச.24) முதல் ஜன.6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன்தொடக்கமாக இன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, காவல்துறையினர், ஆயுதப்படையினர், ஊர்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுளள்னர். 

இந்நிலையில், கந்தூரி விழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு வருகிற ஜனவரி 3 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.