அவிநாசி: அவிநாசி அருகே பழங்கரையில் சாலை தடுப்பில் கார் மோதி விபத்துக்கொள்ளானதில் கோவை சேர்ந்த ஐயப்ப பக்தர் திங்கள்கிழமை அதிகாலை பலியானார்.
கோவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 4 பேர் பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளனர். திங்கள்கிழமை அதிகாலை பவானியில் இருந்து புறப்பட்டு காரில் கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவிநாசி அருகே பழங்கரை புறவழிச் சாலை வரும்போது எதிர்பாராத விதமாக கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த கோவை ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மோகன்( 37) என்பவர் இறந்தார்.
இதையும் படிக்க | மின் இணைப்புடன் ஆதாா்: கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு
மேலும், பலத்த காயமடைந்த 3 பேர் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.