
சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகளை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து வழக்கு தொடுத்த மனுதாரரகளுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்தவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெற ஏதுவாக மாநகராட்சி இணையதளங்களை மேம்படுத்தவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.