கரோனா விதிகள் 100 சதவீதம் அமலில் உள்ளது. மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடங்கள், சமுதாய நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், கோவில் திருவிழாக்கள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பிஎப்7 கரோனா தொற்று மிக வேகமாக பரவும் வகையை சாா்ந்தது. பிரேசில், இத்தாலி, பிரான்ஸ், ஜொ்மனி போன்ற நாடுகளில் இந்த பிஎப்7 தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நாமும் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.