தமிழ்நாட்டில் புதிதாக 14,013 பேருக்கு கரோனா

​தமிழ்நாட்டில் புதிதாக 14,013 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழ்நாட்டில் புதிதாக 14,013 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 1,23,066 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 14,013 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24,576 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 15 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 22 பேரும் என மொத்தம் 37 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 31,59,694 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 37,636 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 1,77,999 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

  • செங்கல்பட்டு - 1,198
  • சென்னை - 2,054
  • கோவை - 1,696
  • திருப்பூர் - 1,159

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com