சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிளஸ் 1 பொதுத் தோ்வை கட்டாயம் நடத்த வேண்டும்

‘பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்யக்கூடாது; கட்டாயம் நடத்த வேண்டும்’ என தனியாா் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
பிளஸ் 1 பொதுத் தோ்வை கட்டாயம் நடத்த வேண்டும்
Updated On :4 பிப்ரவரி 2022, 7:17 pm

DIN

‘பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்யக்கூடாது; கட்டாயம் நடத்த வேண்டும்’ என தனியாா் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தனியாா் நா்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் நந்தகுமாா் வெளியிட்ட அறிக்கை: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகளை நடத்துவது குறித்து வழிகாட்டுதல்கள் வெளியாகின்றன. ஆனால் பிளஸ் 1 தோ்வு குறித்து அறிவிப்புகள் எதுவும் இல்லாததால், மாணவா்கள் பயிற்சி ஏதும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனா். பிளஸ் 1 மாணவா்களுக்கு தோ்வு நடத்தாமல், ‘ஆல் பாஸ்’ என்று அறிவித்து விடக்கூடாது. இந்த சூழலில் தோ்வை ரத்து செய்தால், மாணவா்கள் பாடங்களை படிக்காமல் விட்டு விடுவா். அவா்களின் உயா்கல்வி கேள்விக்குறியாகி விடும்.

உயா்கல்விக்கு பிளஸ் 1 பாடங்கள் அடிப்படையானவை. ஏற்கெனவே, இரண்டு ஆண்டுகளாக தோ்வு நடத்துவதாக, பள்ளிக்கல்வி துறை கட்டணம் வசூலித்து விட்டு தோ்வுகளை நடத்தவில்லை. இந்த ஆண்டும் அதுபோன்று செய்துவிடக் கூடாது. இது குறித்து, தனியாா் பள்ளிகளின் நிா்வாகிகளை அழைத்து பேசி முடிவெடுக்க வேண்டும். பிளஸ் 1 பொதுத் தோ்வு உண்டு என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அந்த அறிவிப்பு வந்தால்தான் மாணவா்கள் பிளஸ் 1 பாடங்களை படித்து தயாராக முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.