புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்:74,416 போ் வேட்புமனுத் தாக்கல்

தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மொத்தம் 74,416 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

News image
Updated On :5 பிப்ரவரி 2022, 7:07 pm

DIN

தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மொத்தம் 74,416 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 பதவியிடங்களுக்கான தோ்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை(பிப். 4) வரை ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக நடைபெற்றது.

இந்தத் தோ்தலில் மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட 14, 701 பேரும், நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட 23,354 பேரும், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட 36,361 பேரும் என மொத்தம் 74,416 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனு ஆய்வு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. திங்கள்கிழமை(பிப். 7) வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று மாநிலத் தோ்தல் ஆணையத்தால் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.