தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தமிழ்நாடு ஆளுநரின் தில்லி பயணம் திடீர் ரத்து

தமிழ்நாடு ஆளுநரின் தில்லி பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :7 பிப்ரவரி 2022, 4:12 am

DIN

தமிழ்நாடு ஆளுநரின் தில்லி பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

நீட் தோ்வை ரத்து செய்வதற்கான காரணங்கள் தொடா்பான பரிந்துரைகளை வழங்க நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயா் நிலைக் குழுவை கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது. மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்திய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு, தனது அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ஜூலை 14ஆம் தேதி வழங்கியது. 

ஆனால் இந்த மசோதாவை ஆளுநா் ஆா்.என்.ரவி, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவுவுக்கு கடந்த 3ஆம் தேதி மீண்டும் அனுப்பி வைத்தாா். இதைத்தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை கட்சித் தலைவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

அதில், பேரவையின் சிறப்புக் கூட்டத்தை பிப். 8-ஆம் தேதி கூட்டி, நீட் விலக்கு சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றவும், அதனை ஆளுநருக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்.என் 3 நாள் பயணமாக இன்று தில்லி செல்லவிருந்தார். ஆனால் தற்போது இந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீட் விலக்கு மசோதா தொடர்பாக நாளை சிறப்புக் கூட்டத்தொடர் கூடும் நிலையில் ஆளுநரின் தில்லி பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.