இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

'தமிழக மக்களை ஆளுநர் அவமானப்படுத்தியுள்ளார்' - காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சு

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி தமிழக மக்களை அவமானப்படுத்தியுள்ளார் என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். 

News image
Updated On :8 பிப்ரவரி 2022, 11:12 am

DIN

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி தமிழக மக்களை அவமானப்படுத்தியுள்ளார் என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். 

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடியது.

இந்த கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது. 

அப்போது காங்கிரஸ் தரப்பில் பேசிய எம்எல்ஏ செல்வப் பெருந்தகை பேசியதாவது: 

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது, தமிழக மக்களை அவமானப்படுத்தியதாகவே காங்கிரஸ் கருதுகிறது. 

'நீதிமன்றத்திற்கு பதில் சொல்லாமல் இருக்கலாம். சட்டங்கள் மூலமாக மக்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்' என்று அம்பேத்கர் கூறியிருக்கிறார். 

அரசியலமைப்புச் சட்டத்தில் விதி 200, 201 முறையே ஆளுநர், குடியரசுத் தலைவர் அதிகாரம் குறித்து அம்பேத்கர்  எழுதியிருக்கிறார். அரசியலமைப்புச் சட்டம் செத்து போகவில்லை; செத்தும் போகாது. 

நீட் விலக்கு மசோதா என்பது பொதுப்பட்டியலில் வருகிறது. விதி 200-இன்படி இதனை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். அதுதான் முறையானது. ஆனால், ஆளுநர் இதனை சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பி குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை கையில் எடுத்திருக்கிறார். ஆளுநர் அவரது வரம்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். 

தமிழக மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை முதல்வர் உணர்ந்து இச்சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்.

தமிழக மாணவர்களின் நலன் கருதி கமிட்டியை அமைத்து அவர்களின் பரிந்துரைக்கு ஏற்பவே சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 

முதல்வர் ஸ்டாலின் சமூக நீதிக்கான முதல்வர். 'தகுதி, திறமை எல்லாம் யோக்கியமானதாக இருக்காது' என பெரியார், அம்பேத்கர் சொன்னதைத் தான் முதல்வர் செயலாற்றிக்கொண்டு இருக்கிறார். 

நீட் விலக்கு மசோதாவை நிராகரிக்க ஆளுநர், ஒரு உச்சநீதிமன்ற வழக்கை மட்டும் காட்டியது ஏற்கத்தக்கல்ல. 

தமிழக மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஆளுநர் நிராகரித்துள்ளார். ஆளுநரின் குறிப்பும் தமிழக மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொன்னதுபோல, தமிழகம் ஒருபோதும் தொட்டதை விடாது. 

அதுபோல முதல்வர் ஸ்டாலின் ஹைவோல்டேஜ் முதல்வர், அவரை யாரும் நெருங்க முடியாது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.