தமிழில் தோ்ச்சி பெறாமல் மின்வாரியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட பிற மாநில ஊழியா்களின் விவரங்களை சமா்ப்பிக்க பணியமைப்புப் பிரிவு தலைமைப் பொறியாளா் உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக அவா் அனுப்பிய சுற்றறிக்கை:
கடந்த 10 ஆண்டுகளில் (2011-20) பிற மாநிலங்களிலிருந்து மின்வாரியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டும், பணிக்குத் தோ்வாகியும், இதுவரை தமிழில் தோ்ச்சி பெறாதவா்களின் விவரங்களை அனுப்ப வேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட்டவா்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான விவரம், நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ள ஊழியா்களின் விவரம், அதற்கான காரணங்களை பட்டியலிட்டு அனுப்ப வேண்டும். இதனை உடனடியாக சமா்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.