நியூட்ரினோ தடை: முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டுகிறேன்; வைகோ

தமிழக அரசு நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததற்கு முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டுகிறேன் எ
நியூட்ரினோ தடை: முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டுகிறேன்; வைகோ
Published on
Updated on
1 min read

தமிழக அரசு நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததற்கு முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டுகிறேன் என மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். 

தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நியூட்ரினோவை விட மேற்குத் தொடர்ச்சி மலைகளே முக்கியம் எனவும் அதனால் அத்திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு பதில் மனு அளித்தது.

தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டிற்காக பலரும் பாராட்டி வரும் வேளையில் வைகோ ‘ தமிழ்நாட்டிற்குக் கேடு விளைவிக்கும் நியூட்ரினோ திட்டத்திற்கு இடம் அளிப்பது இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகின்றேன்’ என அறிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com