சென்னையில் 11 ஆண்டுகளுக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல்: ஆனாலும் இப்படியா?

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி பொதுவாக அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. 
சென்னையில் 11 ஆண்டுகளுக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல்
சென்னையில் 11 ஆண்டுகளுக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல்
Published on
Updated on
2 min read

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி பொதுவாக அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. 

சென்னையில் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் மந்தமான வாக்குப்பதிவே நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. எனினும், நேரம் செல்ல செல்ல வாக்குப்பதிவு சூடுபிடிக்கும் என மாநில தேர்தல் ஆணையர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அதில் மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் மொத்தம் 2.79 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

இந்த நிலையில், காலை 9 மணிக்கு, தமிழகத்தில் இரண்டு மணி நேரத்தில் பதிவான வாக்குப்பதிவு நிலவரங்கள் வெளியாகின. அதில், சென்னை மற்றும் தாம்பரம் பகுதிகளில் மிகக் குறைந்த வாக்குகளே பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறுகையில், சென்னையில் காலை 9 மணி நிலவரப்படி 3.96 சதவீதமும், தாம்பரத்தில் 3.30 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. சென்னையைப் பொருத்தவரை காலையில் மந்தமான வாக்குப்பதிவே காணப்பட்டது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் காணப்படவில்லை.

எனினும், நேரம் செல்ல செல்ல சென்னையில் வாக்குப்பதிவு சூடுபிடிக்கும் என்று மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 8.21 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

12,838 பதவியிடங்களுக்கு...
 தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் காலியாக உள்ள 12,838 இடங்களுக்கான தோ்தலில் மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 14,701 பேரும், நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 23,354 பேரும், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 36,328 பேரும் என மொத்தம் 74,383 போ் வேட்புமனுத் தாக்கல் செய்தனா். இவற்றில் 2,062 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன; 14,324 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இது தவிர மாநகராட்சியில் 4 போ், நகராட்சியில் 18 போ், பேரூராட்சியில் 196 போ் என மொத்தம் 218 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்தல் களத்தில் 57,778 போ்: இதையடுத்து, மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 11,196 பேரும், நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 17,922 பேரும், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 28,660 பேரும் என மொத்தம் 57 ஆயிரத்து 778 தோ்தல் களத்தில் உள்ளனா்.

பிப்.22-இல் வாக்கு எண்ணிக்கை
வரும் 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

சென்னையில், 11 மணி நிலவரப்படி 17.7 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் எதிர்பார்ப்புப்படி, காலை 9 மணி வரை வெறும் 3 சதவீத வாக்குகளே பதிவான நிலையில், 11 மணிக்கு 17.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com