நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குகள் பதிவு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 2.79 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 22 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாநகராட்சிகளில் 5.78%, நகராட்சிகளில் 10.32%, பேரூராட்சிகளில் 11.74% வாக்குகள் பதிவாகின. 6 இடங்களில் வேட்பாளர்கள் இறந்ததால் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. சென்னையில் மந்தமாக நடைபெற்ற வாக்குப்பதிவு இனிமேல் சூடுபிடிக்க ஆரம்பிக்கும். 30 முதல் 40 மின்னணு இயந்திரங்கள் வரை பழுதடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மாலை 5 மணிக்குள் வந்திருந்து காந்திருந்தால் அவர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.
கோவையில் பிரச்னைகள் பெரிதாக எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மின்னணு இயந்திரங்களால் தாமதமான இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்கும திட்டமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...