ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

புவனகிரி பேரூராட்சி: ஒரு வார்டில் மறுவாக்குப்பதிவு

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் ஒரு வார்டில் வாக்கு இயந்திரம் பழுதானதால் வரும் 24-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :22 பிப்ரவரி 2022, 5:18 pm

DIN


கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் ஒரு வார்டில் வாக்கு இயந்திரம் பழுதானதால் வரும் 24-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்பட 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

இதனிடையே, கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியிலுள்ள ஒரு வார்டில் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு இயந்திரம் பழுதானது. இதனால், அந்த ஒரு வார்டுக்கு மட்டும் வாக்குச் சாவடி எண் 4 AV-இல் வரும் 24-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.