வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

அருப்புக்கோட்டை நகராட்சியை பெரும்பான்மையுடன் கைப்பற்றியது திமுக

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியின் மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 29 வார்டுகளில் வென்றதன்மூலம் அருப்புக்கோட்டை நகராட்சிமன்றத்தை மீண்டும் திமுக கைப்பற்றியது.

அருப்புக்கோட்டை நகராட்சியின் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம் திமுக சார்பில் 8வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றார்.

Published On :

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியின் மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 29 வார்டுகளில் வென்றதன்மூலம் அருப்புக்கோட்டை நகராட்சிமன்றத்தை மீண்டும் திமுக கைப்பற்றியது.

அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. கடந்த 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையடுத்து செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றன. 

இதற்கென அறிவிக்கப்பட்டபடி வாக்கு எண்ணும் மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தேவாங்கர் கலைக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு முதலாவதாக தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணிகள் தொடங்கின.

அதைத்தொடர்ந்து சுமார் நண்பகல் 1 மணி வரை வார்டுவாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, உரிய வெற்றி வேட்பாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி சான்றிதழ்களை வழங்கினார். இதில், திமுக மற்றும் பிற கட்சிகள், சுயேச்சைகளின் வெற்றி விபரம்..

அருப்புக்கோட்டை நகராட்சி = மொத்தம் 36 வார்டுகள்.

திமுக கைப்பற்றியது = 29 வார்டுகள்.

அதிமுக கைப்பற்றியது = 3 வார்டுகள்.

மதிமுக    கைப்பற்றியது = 1, 

பாஜக     கைப்பற்றியது = 1,

சிபிஎம் கைப்பற்றியது = 1,

சுயேச்சை கைப்பற்றியது = 1.

திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து திமுக தொண்டர்கள் திரளாகக்கூடி,பட்டாசு வெடித்து, விதவிதமான மேளங்கள் இசைத்து,ஆடிப்பாடிக் கொண்டாடினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.