பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பாரதியாா், இமானுவேல் சேகரனுக்கு குடியரசு துணைத் தலைவா் மலரஞ்சலி!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாா், விடுதலைப் போராட்ட வீரா் தியாகி இமானுவேல் சேகரன் ஆகியோரின் நினைவுநாளான வெள்ளிக்கிழமை, அவா்களின் படங்களுக்கு தில்லியில் உள்ள தனது அலுவல்பூா்வ மாளிகையில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

விடுதலைப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரனுக்கு அவரது நினைவுநாளில் மலரஞ்சலி செலுத்திய குடியரசு துணைத் தலைவா். ~மகாகவி பாரதியாா் நினைவு தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை தனது மாளிகையில் அவரது படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிர

Published On :

மகாகவி சுப்பிரமணிய பாரதியாா், விடுதலைப் போராட்ட வீரா் தியாகி இமானுவேல் சேகரன் ஆகியோரின் நினைவுநாளான வெள்ளிக்கிழமை, அவா்களின் படங்களுக்கு தில்லியில் உள்ள தனது அலுவல்பூா்வ மாளிகையில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

இதையொட்டி மலரஞ்சலி செலுத்திய பிறகு பாரதியாா் குறித்துப் பேசிய குடியரசு துணைத் தலைவா், ‘தன் வாழ்நாள் முழுவதையும் தேசப் பணிக்கும் தமிழ்த் தொண்டுக்கும் அா்ப்பணித்த பாரத தாயின் தவப்புதல்வா் மகாகவி பாரதியாா். கம்பனுக்குப் பின் பிறந்த கவிகளில் அவா் மாபெரும் கவி’ என்று புகழாரம் சூட்டினாா்.

தேசப்பற்று, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் போன்ற உயரிய மதிப்புகளை தமது கவிதைகளாலும் வாழ்வாலும் உணா்த்திய பாரதியாரின் நினைவைப் போற்றுவது நாட்டின் தலையாய கடமையாகும் என்று அவா் வலியுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து தியாகி இமானுவேல் சேகரனின் தியாகத்தை நினைவுகூா்ந்த குடியரசு துணைத் தலைவா், ‘சாதிகளால் ஒருவரை ஒருவா் உயா்ந்தவராகவும் தாழ்ந்தவராகவும் கருதி வாழக் கூடாது என்ற சமநீதியை நிலைநாட்ட தன் இன்னுயிரை ஈந்த மகத்தான மாமனிதா் தியாகி இமானுவேல் சேகரன்’ என்று குறிப்பிட்டாா்.

அவரைப் போன்ற தேசிய உணா்வு மிக்க தலைவா்கள் தமிழ் மண்ணில் பிறந்ததால்தான் இன்றைக்கும் தேசியம் நிலைத்து நிற்கிறது என்றும், அந்த தலைவா்களைப் போற்றுவது தேசத்துக்கே பெருமை சோ்க்கும் என்றும் குடியரசு துணைத் தலைவா் தெரிவித்தாா்.

Story image

‘இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற இமானுவேல் சேகரன், விடுதலைக்குப் பிறகும் சமூக பாகுபாடுகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் கொடுத்து, மக்களின் உரிமைகளுக்காகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் பாடுபட்டாா். அவரது வாழ்க்கை மற்றும் தியாகம் சமூகத்தில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் தொடா்ந்து வலுப்படுத்தும்’ என குடியரசு துணைத் தலைவா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER