ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் விசிக வேட்பாளர் தர்னா

மதுரை மாநகராட்சி 30-வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு எண்ணும் மையத்தில் மாநகராட்சி ஆணையர் வாகனம் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

News image
தர்னாவில் ஈடுபட்ட விசிக வேட்பாளர் மோகனா
Updated On :22 பிப்ரவரி 2022, 11:45 am

DIN


மதுரை மாநகராட்சி 30-வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு எண்ணும் மையத்தில் மாநகராட்சி ஆணையர் வாகனம் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சியின் 30வது வார்டில் விசிக, அதிமுக, பாஜக உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த வார்டில் 7 ஆயிரத்து 491 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் அதிமுக வேட்பாளர் வசந்தா தேவி 2,366 வாக்குகள் பெற்றார். விசிக வேட்பாளர் மோகனா 2,344 வாக்குகள் பெற்றார். இதையடுத்து 22 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாக வாக்கெண்ணும் அலுவலர்கள் அதிமுகவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாகவும் கூறி விசிக வேட்பாளர் மோகனா போராட்டத்தில் ஈடுபட்டார். 

மாநகராட்சி ஆணையரின் வாகனம் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.