உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் ஏராளமான பொது மக்கள் வாக்களித்தனர்.
பின்னர் 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு உசிலம்பட்டி 24 வார்டுக்கு உட்பட்ட அனைத்து வாக்கு பெட்டிகளை நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் வைத்து எண்ணப்பட்டது.
இதில் 16வது வார்டு திமுக கட்சியில் போட்டியிட்ட சு. சுபாகரன் வெற்றி பெற்றுள்ளார். நகராட்சித் தேர்தலில் கிடைத்த 401 வாக்குகள் வாங்கி வென்றுள்ளார். உசிலம்பட்டியில் முதல் இளம் வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.