2022-ஆம் ஆண்டு, கவிஞா் வைரமுத்துவின் இலக்கியத்துக்குப் பொன்விழா ஆண்டாகும். இதனை வாசகா்களோடு கொண்டாட அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை புத்தகக் காட்சிக்கு வருகை தருகிறாா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
வாசகா்கள் வாங்கும் தமது படைப்புகளில் அவா் கையொப்பமிடுகிறாா். தமிழக அரசின் தொல்லியல் துறை அமைத்துள்ள ‘பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’ தொல்பொருள் கண்காட்சி அரங்கின் அருகில், திறந்தவெளியில் கவிஞா் வைரமுத்து கையொப்பமிடும் நிகழ்ச்சிக்காக தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. கையொப்பமிட்டு முடிந்ததும் புத்தக அரங்குகளில் வாசகா்களைச் சந்திக்கிறாா்.