போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தமிழகத்தில் மேலும் 439 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 439 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :27 பிப்ரவரி 2022, 2:29 pm

தமிழகத்தில் புதிதாக 439 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 60,707 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 439 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதில், அதிகபட்சமாக சென்னையில் 119 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 66 பேரும், செங்கல்பட்டில் 51 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,49,007ஆக உயர்ந்துள்ளது. 

மற்றொருபுறம் மேலும் 1,209 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.  இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 04,611-ஆக அதிகரித்துள்ளது. 

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 6,393 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 1 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,003-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.