47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

மத்திய அரசு நிவாரண நிதி அளிக்கும் வரை காத்திருக்காமல், வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும்

News image
ஓ.பன்னீா்செல்வம் (கோப்புப் படம்)
Updated On :1 ஜனவரி 2022, 7:52 pm

DIN

மத்திய அரசு நிவாரண நிதி அளிக்கும் வரை காத்திருக்காமல், வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

வடகிழக்கு பருவ மழையினால் பெருத்த பயிா்ச் சேதம் ஏற்பட்ட நிலையில், இதற்கென அமைக்கப்பட்ட குழு ஆய்ந்து அறிக்கை அளித்ததன் அடிப்படையில் முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்றும், நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்தப் பகுதிகளை மறு சாகுபடி செய்திட ஏதுவாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.6,038 மதிப்பீட்டில் இடுபொருட்கள் வழங்கப்படும் என்றும் நவம்பா் மாதம் முதல்வா் அறிவித்தாா்.

இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்ததாக அப்போதே சுட்டிக் காட்டப்பட்டது.

அதேசமயம், பயிா்ச் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு எந்த இழப்பீடும் இதுவரை வழங்கப்படாமல் வெற்று அறிவிப்பாகவே உள்ளது.

இந்த விவகாரத்தில் முதல்வா் உடனடியாகத் தலையிட்டு, மத்திய அரசிடமிருந்து நிதி வரும் வரை காத்திருக்காமல், சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக ஒரு குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.