எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழக மீனவர்கள் 13 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம்

தமிழகத்தை சேர்ந்த 13 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :5 ஜனவரி 2022, 6:30 am

DIN

தமிழகத்தை சேர்ந்த 13 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம், மண்டபம் பகுதிகளிலிருந்து டிசம்பா் 18 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவா்களை, இலங்கை கடற்படையினா் சிறைப்பிடித்தனா். இதேபோல், புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்களை, படகுகளுடன் அடுத்தடுத்த நாள்களில் சிறைப்பிடித்துச் சென்றனா். மொத்தம் 68 தமிழக மீனவா்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மன்னார் நீதிமன்றம் இன்று வெளியிட்ட உத்தரவில்,

ராமேசுவரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 13 மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன் 2 விசைப்படகுகளையும் திருப்பி வழங்குமாறு கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.