செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தல்

அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. 

News image

மதுரை  உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)

Updated On :7 ஜனவரி 2022, 2:49 pm

அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை-திருமணஞ்சேரியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்துதர உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 3 வாரத்துக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.