தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சென்னையில் 25,000-யைக் கடந்த கரோனா பாதிப்பு: மண்டலவாரியாக விவரம்

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

News image
சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம்
Updated On :10 ஜனவரி 2022, 6:29 am

DIN

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒரேநாளில் 5,000 என்ற அளவில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 12,895 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அதிகபட்ச பாதிப்பாகும். அதுபோல சென்னையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 6,186 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 8 மாதங்களில் இல்லாத புதிய உச்சம். 

இதையடுத்து இன்று(திங்கள்) காலை சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சென்னையில் தற்போது 25,798 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதுவரை 8,676 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 3,382 பேரும், அண்ணா நகரில் 3,312 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, ராயபுரம், கோடம்பாக்கம், அடையாறில் பாதிப்பு 2,000-யைக் கடந்துள்ளது. 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.