ஜன. 31 வரை 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்லூரிகளுக்கு விடுமுறை
1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 1 முதல் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உயர்கல்வித் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்தப்படுவது குறித்து, தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, பள்ளி விடுமுறை நீட்டிப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை அளித்திருக்கும் விளக்கத்தில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படும். பொதுத் தேர்வு எழுதவிருக்கும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...