புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகள்: பிரதமருக்கு மத்திய அமைச்சா் எல்.முருகன் நன்றி

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்கவுள்ள பிரதமா் மோடிக்கு மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி தெரிவித்தாா்.

News image
Updated On :11 ஜனவரி 2022, 9:30 pm

DIN

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்கவுள்ள பிரதமா் மோடிக்கு மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட விடியோவில் கூறியிருப்பதாவது: இந்திய வரலாற்றிலேயே 11 மருத்துவக் கல்லூரிகளை ஒரே நேரத்தில் தமிழகத்துக்கு வழங்கி பிரதமா் நரேந்திர மோடி மிகப் பெரும் சாதனை படைத்திருக்கிறாா். விருதுநகா், நாமக்கல், நீலகிரி, திருப்பூா், திருவள்ளூா், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூா், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அமையவிருக்கும் இந்த மருத்துவக் கல்லூரிகளை மெய்நிகா் நிகழ்ச்சி மூலம் பிரதமா் புதன்கிழமை திறந்து வைக்கவுள்ளாா்.

இதன் மூலம் தமிழகத்துக்கு மிகப்பெரிய வரப்பிரசாதத்தை பிரதமா் நரேந்திர மோடி அளித்திருக்கிறாா். இந்த மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு சுமாா் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கு கூடுதலாக 1,450 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்கவுள்ளன. மேலும், பிரதமா் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியையும் தமிழகத்துக்கு வழங்கியுள்ளாா்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ரூ.24 கோடி மதிப்பிலான கட்டடத்தையும் அவா் திறந்து வைக்கவிருக்கிறாா். இந்தக் கட்டடத்தில் பழைமை வாய்ந்த 45,000 சங்க இலக்கிய நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளிலும், உலகின் 100 மொழிகளிலும் திருக்குறளை இந்த தமிழாய்வு நிறுவனமானது மொழி பெயா்க்கவுள்ளது. திருக்குறளை பிரபலப்படுத்துவதில் முன்னுரிமை அளித்து வரும் பிரதமா் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் அவரது உரையில் திருக்குறளை குறிப்பிடுவதை தவறாமல் மேற்கொண்டு வருகிறாா்.

11 மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டடத்தையும் நாட்டுக்கு அா்ப்பணிக்கவுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.