பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார். 
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்!
Published on
Updated on
1 min read

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார். 

தமிழகத்தில் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்கள், இணை நோயுள்ளவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இன்று முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com