தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

ஜன. 16ல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது; கட்டணம் திருப்பி அளிக்கப்படும்: போக்குவரத்துத்துறை

வருகிற ஜனவரி 16 ஆம் தேதி பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது என்றும் அன்று பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :11 ஜனவரி 2022, 3:25 pm IST

வருகிற ஜனவரி 16 ஆம் தேதி பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது என்றும் அன்று பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று 2,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இதனிடையே பொங்கல் சிறப்புப் பேருந்துகளில் 75% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற ஜனவரி 16 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. 

இதையடுத்து, வருகிற ஜனவரி 16 ஆம் தேதி பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 16 அன்று பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு இரு நாள்களில் கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.