சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

புதுக்கோட்டை: பிரசன்ன ரெகுநாத பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு புதுக்கோட்டை அருகில் உள்ள கடையக்குடி  ஸ்ரீ பிரசன்ன ரெகுநாதர் பெருமாள் கோயிலில்  சொர்க்கவாசல் வியாழக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டது.

News image
பிரசன்ன ரெகுநாத பெருமாள்
Updated On :13 ஜனவரி 2022, 4:49 am

DIN

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு புதுக்கோட்டை அருகில் உள்ள கடையக்குடி  ஸ்ரீ பிரசன்ன ரெகுநாதர் பெருமாள் கோயிலில்  சொர்க்கவாசல் வியாழக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டது.

மூலவர்  பிரசன்ன ரெகுநாதர் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் தீபாராதனை நடைபெற்றது. 

உற்சவர்  ஸ்ரீ ராமர், சீதாதேவி, இளையபெருமாள், லெஷ்மணர்  ஆகியோர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

Story image

பின்னர் உற்சவர் ஸ்ரீ பிரசன்ன ரெகுநாதர் பெருமாள், சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பரமபதவாசலைக் கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பட்டாச்சாரியார்கள் ஆராஅமுதன், பார்த்தசாரதி ஆகியோர்  பூஜைகளை  சிறப்புடன் கவனித்தனர். 

பல்வேறு பிரமுகர்கள், சுற்றுவட்டராத்தைச் சேர்ந்த பக்தர்கள் வருகைதந்து வழிபட்டனர்.  அனைவருக்கும்  பிரசாதம்  வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.