புதுக்கோட்டை அருகேயுள்ள திருமயம் அருள்மிகு சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோவிலில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை நடைபெற்றது.
மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழங்க சத்தியமூர்த்தி பெருமாள் சொர்க்கவாசலைக் கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.