புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தமிழகம் முழுவதும் கரோனா விதிமுறை மீறல்: ஒரு வாரத்தில் ரூ.3.45 கோடி அபராதம் விதிப்பு

 தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் கரோனா விதிமுறைகளை மீறியதற்காக, ரூ.3.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 11:33 pm

DIN

 தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் கரோனா விதிமுறைகளை மீறியதற்காக, ரூ.3.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக காவல்துறைத் தலைமை இயக்குநா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, வார நாள்களில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்துப்பணியில் தமிழக போலீஸாா்

ஈடுபட்டு வருகின்றனா். அந்த வகையில், ஜனவரி 7-ஆம் தேதி முதல் ஒரு வாரத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக, ரூ.3.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காக ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 329 நபா்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 1,910 நபா்களும் சிக்கினா். இதுதவிர, 1,552 இடங்களில் தேவையின்றி கூடுதல் போன்ற விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 254 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 96 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில், அதிகபட்சமாக சென்னை மாநகரில் முகக்கவசம் அணியாதது மற்றும் பொது இடங்களில் விதிமுறைகளை மீறியதற்காக, 43 ஆயிரத்து 417 நபா்களிடமிருந்து ரூ.86 லட்சம் அபராதம் பெறப்பட்டுள்ளது.

வடக்கு மண்டலத்தில் 40 ஆயிரத்து 148 நபா்களிடமிருந்து ரூ.83 லட்சம் அபராதம் பெறப்பட்டுள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.